அரசுத்துறை அலட்சியத்தாலும் ஜெயங்கொண்டம் மின் திட்டம் மாயம்
அரசுத்துறை அலட்சியத்தாலும் ஜெயங்கொண்டம் மின் திட்டம் மாயம்
அரசுத்துறை அலட்சியத்தாலும் ஜெயங்கொண்டம் மின் திட்டம் மாயம்

தமிழக மின்துறை, தொழிற்துறை மற்றும் என்.எல்.சி., ஒருங்கிணைந்து செயல்படாமல், அலட்சியமாக இருந்ததும், ஜெயங்கொண்டம் அனல் மின் திட்டம் முடங்கியதற்கு முக்கிய காரணம் என, அதிகாரிகள் தற்போது தெரிவித்த கருத்துகளில் இருந்து வெளிப்படுகிறது.அரசியல் போராட்டங்கள், நில ஆர்ஜித பிரச்னைகளால் திட்டம் முடங்கியதாகவும், திட்டத்திற்காக நிலம் கொடுத்தவர்கள், ஏமாற்றத்துடன் காத்திருப்பதாகவும், கடந்த, 19ம் தேதி, 'தினமலர்' நாளிதழில் விரிவான கட்டுரை வெளியானது.இதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் திட்டம் குறித்து கேட்டபோது, எந்த துறையினரும் பொறுப்பேற்க மறுத்தனர்.இதுகுறித்து, என்.எல்.சி., அதிகாரி கூறியதாவது:எங்களை பொறுத்தவரை ஜெயங்கொண்டம் திட்டத்தை கொண்டு வர தயாராக உள்ளோம்.
நிலமும், உள்கட்டமைப்பு வசதிகளும் இல்லாமல், நாங்கள் எந்த திட்டத்தையும் கொண்டு வர முடியாது.
தமிழக மின்துறை மேலதிகாரி கூறியதாவது:மின் தட்டுப்பாடை சமாளிக்க, இத்திட்டம் அவசியமானது. இத்திட்டத்தை கவனிக்க தனி அதிகாரியை நியமித்துள்ளோம். ஆனால், மத்திய பொதுத் துறை நிறுவனமான என்.எல்.சி., தமிழக தொழிற்துறையுடன் இணைந்து, பணிகளை மேற்கொள்ள வேண்டும். இதில் எங்கள் பங்கு எதுவும் இல்லை.