ADDED : செப் 12, 2011 02:18 AM
தர்மபுரி: தர்மபுரி அருகே நேற்று நடக்கவிருந்த சிறுமி திருமணத்தை
வருவாய்த்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.தர்மபுரி அடுத்த பாலக்கோடு
காட்டம்பட்டியை சேர்ந்தவர் முருகன் இவரது மகள் சத்யா (17).
இவருக்கும்
பாப்பாரப்பட்டி தெத்துப்பள்ளத்தை சேர்ந்த முனுசாமி மகன் முருகசாமி (24)
என்பவருக்கும் நேற்று மணமகன் இல்லத்தில் திருமணம் நடக்கவிருந்தது.இளம் வயது
திருமணம் நடப்பதாக பாலக்கோடு தாசில்தார் மணிக்கு கிடைத்த தகவலின் பேரில்,
ஆய்வாளர்கள் ராஜராஜன், மாதப்பன், வி.ஏ.ஓ., முனுசாமி மற்றும் போலீஸார்
நேற்று முன் தினம் இரவு மணமகன் இல்லத்துக்கு சென்று இளம் வயது பெண்ணை
திருமணம் செய்வது சட்டப்படி குற்றமாகும். மேலும் இளம் வயதில் பெண்ணை
திருமணம் செய்தால் பெற்றோர்களுக்கு சிறை தண்டனை வழங்கப்படும் என இரு
வீட்டாரையும் எச்சரிக்கை செய்து திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.