ADDED : ஆக 11, 2011 10:57 PM
கூடலூர் : கூடலூரில் மாற்றுத்திறனாளிகள் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
ஊர்வலத்துக்கு அனைவருக்கும் கல்வி திட்டத்தின் மேற்பார்வையாளர் ராஜாமணி முன்னிலை வகித்தார். ஊர்வலத்தை பள்ளி தலைமை ஆசிரியர் சந்திரன் துவக்கி வைத்தார். மாற்றுத்திறனாளிகளை கண்டறிந்து அனைத்து அடிப்படை வசதிகளும் அவர்களுக்கு ஏற்படுத்தி தரவேண்டும்; பகல் நேர பராமரிப்பு மையத்தில் பயிற்சி அளிக்க வேண்டும்; இதற்கு அனைவரும் விழிப்புடன் முன் வரவேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஊர்வலம் வண்டிபேட்டை ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் நிறைவடைந்தது.