துப்பாக்கியுடன் திரிந்த 2 பேர் கைது
துப்பாக்கியுடன் திரிந்த 2 பேர் கைது
துப்பாக்கியுடன் திரிந்த 2 பேர் கைது
ADDED : ஆக 03, 2011 05:23 PM
ராஜபாளையம் : மேற்குதொடர்ச்சி மலையின் கெண்டிப்பாறை அருகே, 2 பேர் துப்பாக்கியுடன் நடமாடுவதாக வனத்துறைக்கு வந்த தகவலையடுத்து, வனத்துறை அதிகாரிகள் மலைப்பகுதியில் அதிரடி தேடுதல் வேட்டை நடத்தினர்.
இதன்விளைவாக, ராஜபாளையம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த ரவிக்குமார் (34), சக்திவேல் (28) கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து, ஒற்றைக்குழல் துப்பாக்கி, வேட்டைக்கு உதவும் நெற்றியில் கட்டப்படும் விளக்கு, சிவப்பு பாஸ்பரஸ், தோட்டா தயாரிக்க பயன்படும் வெடிமருந்து, டிஜிட்டல் கேமரா, பால்ரஸ் குண்டுகள், வெளிநாட்டு கத்திகள் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவர்களுக்கும், பயங்கரவாத அமைப்புகளுக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை துவக்கியுள்ளனர்.


