ADDED : செப் 05, 2011 06:13 AM
மும்பை : மும்பை சர்வதேச விமான நிலையத்தில் கடந்த வெள்ளியன்று ஓடு பாதையில் இருந்து விலகி சகதியில் சிக்கிய துருக்கி நாட்டின் துருக்கிஷ் ஏர்லைன்ஸ் விமானம் அப்புறப்படுத்தப்பட்டது.
மூன்று நாட்கள் நடந்த மீட்பு பணியால் விமானம் மீட்கப்பட்டது. இதனால் விமான ஓடுதளம் மூன்று நாட்கள் மூடப்பட்டிருந்த நிலையில், மீண்டும் ரன்வே திறக்க வாய்ப்புள்ளது.


