Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/அரசு பள்ளிகளுக்கு சமச்சீர் பாட புத்தகங்கள் வினியோகம்

அரசு பள்ளிகளுக்கு சமச்சீர் பாட புத்தகங்கள் வினியோகம்

அரசு பள்ளிகளுக்கு சமச்சீர் பாட புத்தகங்கள் வினியோகம்

அரசு பள்ளிகளுக்கு சமச்சீர் பாட புத்தகங்கள் வினியோகம்

ADDED : ஆக 18, 2011 04:33 AM


Google News

புதுச்சேரி : அரசுப் பள்ளிகளுக்குச் சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களை வினியோகிக்கும் பணி, விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் சமச்சீர் கல்வித் திட்ட பாடப் புத்தகங்கள் வினியோகிக்கும் பணியை, கடந்த 12ம் தேதி பள்ளிக் கல்வி இணை இயக்குனர் கிருஷ்ணராஜ் துவக்கி வைத்தார். அன்றைய தினம் ஓரிரு பள்ளிகளுக்கு மட்டும் புத்தகங்கள் வழங்கப்பட்டன.

அதன்பிறகு தொடர்ச்சியாக நான்கு நாட்கள் அரசு விடுமுறையானதால், புத்தகம் வினியோகிக்கும் பணி நேற்று மீண்டும் தொடர்ந்தது. அந்தந்த அரசுப் பள்ளிகளிலிருந்து ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள், முதலியார்பேட்டையில் உள்ள குடோனுக்கு வந்து, தங்களுக்குத் தேவையான சமச்சீர் கல்விப் பாடப் புத்தகங்களைப் பெற்றுச் சென்றனர். தற்போது 6 மற்றும் 10ம் வகுப்புகளுக்கான பாடப் புத்தகங்கள் மட்டுமே அரசுப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

மற்ற வகுப்புகளுக்கான பாடப் புத்தகங்கள் இன்று அல்லது நாளை முதல் வழங்கப்படும் என கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us