ADDED : ஆக 18, 2011 12:30 AM
கடலூர் : கடலூர் திருப்பாதிரிப்புலியூர் வரதராஜ பெருமாள் கோவில் வளாகத்தில் ஸ்ரீமத் மணவாள மாமுனிகள் கைங்கர்ய சபா சார்பில் 14ம் ஆண்டு வைஷ்ணவ மாநாடு நடந்தது.
செயற்குழு உறுப்பினர் ரமணன் கொடியேற்றினார். சடகோப ராமாஜனுதாசன் தலைமை தாங்கி சொற்பொழிவு ஆற்றினார். தலைவர் சாம்பசிவம் வரவேற்றார். பொருளாளர் நடராஜன் ஆண்டறிக்கை வாசித்தார். பெருமாள் ராமானுஜ சுவாமிகள் துவக்க உரையாற்றினார். கோகுலாச்சாரி, அரங்கநாதச்சாரிய சுவாமிகள், ஆசூரி சுதா, சாந்தலட்சுமி ராமச்சந்திரன், ரகுவீரபட்டாச்சாரியார் ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் பேசினர். செயலர் துரையன் தொகுத்து வழங்கினார். மாநாட்டில் செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதர் ராமானுஜதாசன் உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். நரசிம்மன் ராமானுஜதாசன் நன்றி கூறினார்.


