/உள்ளூர் செய்திகள்/மதுரை/மக்கள் குறைதீர் நாளில் தேவையற்ற நெருக்கடிமக்கள் குறைதீர் நாளில் தேவையற்ற நெருக்கடி
மக்கள் குறைதீர் நாளில் தேவையற்ற நெருக்கடி
மக்கள் குறைதீர் நாளில் தேவையற்ற நெருக்கடி
மக்கள் குறைதீர் நாளில் தேவையற்ற நெருக்கடி
மதுரை : மதுரை கலெக்டர் அலுவலகத்தில் ஒவ்வொரு திங்கள் கிழமையும் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடக்கிறது.
இலவச மனைப்பட்டா, ரேஷன் கார்டு, ஊர்ப்பிரச்னை தொடர்பாக கூட்டம், கூட்டமாக மனுக்களை கொடுக்க வருவோராலும் கூட்டம் அலைமோதுகிறது. குறைதீர் நாள் கூட்டம் நடைபெறும் அரங்கம் அருகிலேயே குடிமை பொருள் வழங்கல் அதிகாரிகளின் 4 அலுவலகங்கள் உள்ளன. சாதாரண நாட்களிலேயே இங்கு வரும் கூட்டம்
எழுதப் படிக்க தெரியாதோரிடம் படிவங்கள் விற்பது, அவற்றை பூர்த்தி செய்து வழங்குவது இவர்கள் பணி. இவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உள்ளதால் அவர்களைச் சுற்றி கூட்டமும் அமர்ந்து கொள்கிறது. இதனால் மேலும் தேவையற்ற நெருக்கடி ஏற்படுகிறது. திங்கட் கிழமைகளில் இந்த ரோட்டில் நடந்து செல்வதே சிரமமாக உள்ளது. எனவே இப்பகுதியில் மனுக்கள் எழுதுவோரை வேறு இடங்களில் அமரச் செய்வதோடு, வாகனங்களை நிறுத்தவும் வேறு இடங்களை ஒதுக்கலாம்.