Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/வீட்டு இடத்தகராறில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு

வீட்டு இடத்தகராறில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு

வீட்டு இடத்தகராறில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு

வீட்டு இடத்தகராறில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு

ADDED : செப் 23, 2011 10:56 PM


Google News
சிவகங்கை : சிவகங்கை அருகே தேவினிப்பட்டியை சேர்ந்தவர் சங்கு, 50.

இவரது வீட்டிற்கு பின்னால் உள்ள இடத்தை சுப்பையா மகன்கள் மகாலிங்கம், 58. மலைச்சாமி, 52. ஆக்கிரமித்துள்ளனர். இந்த வீட்டு இடப்பிரச்னை தொடர்பாக, கடந்த 22ம் தேதி பகல் 12.30 மணிக்கு தகராறு ஏற்பட்டது. இதில், சகோதரர்கள் இருவரும் அரிவாளால், சங்குவின் தலையில் வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த அவர் சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். எஸ்.ஐ.,நவநீதகிருஷ்ணன், சகோதரர்கள் மகாலிங்கம், மலைச்சாமியை கைது செய்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us