
'எப்படி ஆட்சி அமையும்...?'
கர்நாடக மாநில காங்., தொழிலாளர் பிரிவு தலைவர் பிரகாசம், சமீபத்தில் மதுரை வந்தார்.
'இவர் வேறயா...?'
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூரில், அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில், குமரகுரு எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., ஞானமூர்த்தி மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.அவர்கள் பேசும்போது, 'கடந்த உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க., ஒரு ஒன்றிய கவுன்சிலர் சீட்டைக் கூட பிடிக்கவில்லை. வரும் தேர்தலில் சேர்மன் பதவியையும் சேர்த்து பிடித்தாக வேண்டும்' என்றனர்.இதைக் கேட்ட புதிய மாவட்ட செயலர் மோகன், 'இந்த ஒன்றியத்தில் பல தேர்தல்களில் அ.தி.மு.க., அதிக ஓட்டுகள் பெற்றுள்ளது. ஆனால், உள்ளாட்சி தேர்தலில் எங்கேயோ ஓட்டை விழுந்து விடுகிறது. இந்த தேர்தலில் சேர்மன் பதவியை பிடித்தே தீர வேண்டும். கட்சிக்கு துரோகம் செய்பவர்கள் யாராக இருந்தாலும், எந்தப் பொறுப்பிலிருந்தாலும், அம்மாவிடம் சொல்லி தண்டிக்கப்படுவர்' என்று எச்சரித்தார்.இதைக் கேட்ட தொண்டர் ஒருவர், 'ம்... கட்சியில என்ன நடந்தாலும் உடனே, 'அம்மா'வுக்கு, 'மொட்டை பெட்டிஷன்' போட்டு காலி பண்ணிடறாங்க... இந்த,'பார்முலா' நல்லாவே வேலை செய்யுது...' என, பாராட்டியபடியே சென்றார்!