Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ஏலம் போக காத்திருக்கும் ஊராட்சி தலைவர்கள்

ஏலம் போக காத்திருக்கும் ஊராட்சி தலைவர்கள்

ஏலம் போக காத்திருக்கும் ஊராட்சி தலைவர்கள்

ஏலம் போக காத்திருக்கும் ஊராட்சி தலைவர்கள்

ADDED : ஆக 29, 2011 12:55 AM


Google News

ராமநாதபுரம் : உள்ளாட்சித் தேர்தல் நெருங்க உள்ள நிலையில், ஏலம் போகக் காத்திருக்கின்றனர், ஊராட்சித் தலைவர்கள்.

உள்ளாட்சித் தேர்தலில், ஊர்க் கட்டுப்பாட்டை மதித்து, பொது வேட்பாளரை எதிர்த்து, யாரும் போட்டியிடாத ஊராட்சிகளில், ஏலம் முறையில் ஊராட்சித் தலைவர் பதவி விற்கப்படுகிறது. ஏலம் போகும் ஊர்களில், ஊர்த்தலைவர்கள் தலைமையில், கிராமத்தினர் முன்னிலையில் ஊர்க் கூட்டம் நடத்தப்படுகிறது. ஊராட்சித் தலைவர் பதவிக்கான ஏலத்தொகை, கிராமங்களின் எண்ணிக்கை, வாக்காளர்களின் எண்ணிக்கைக்குத் தக்கவாறு, நிர்ணயம் செய்யப்படுகிறது. ஐந்து லட்சம் முதல் 30 லட்ச ரூபாய் வரை, ஊராட்சித் தலைவர் பதவி ஏலம் விடப்படுகிறது.



ஒரு ஊருக்கு, ஆறு முதல் ஏழு பேர் வரை போட்டியிடும் பட்சத்தில், ஊர் ஒற்றுமைக்காக, குலுக்கல் முறையில் தலைவரைத் தேர்ந்தெடுக்கின்றனர். சில ஊர்களில், ஏலத் தொகை யார் அதிகம் கொடுக்கிறார்களோ, அவர்களுக்கு ஊராட்சித் தலைவர் பதவி கிடைக்கும். மற்றவர்கள் ஒதுங்கி விட வேண்டும் என்பது, ஊர்க் கட்டுப்பாடு. ஏலத்தொகையை வைத்து, கோவில் புனரமைப்புப் பணிகள், சமுதாயக் கூடம் கட்டுதல் போன்றவற்றை நிறைவேற்றுகின்றனர்.



தற்போது, 250 ஓட்டுகள் உள்ள வார்டுக்கு, ஐந்து லட்ச ரூபாய் வரை மறைமுகமாக விலை பேசப்பட்டு வருகிறது. கடந்த ஆட்சியில், அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் மூலம், ஊராட்சிக்குக் கணிசமான தொகை வழங்கப்பட்டது. அதனால், இதை வைத்தே ஏலத்தொகை இருந்தது. தற்போது, அந்தத் திட்டம் முடங்கிய நிலையில், 100 நாள் வேலை திட்டத்தை முன்னிறுத்தி, ஏலத்தொகை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us