ADDED : ஆக 05, 2011 01:43 AM
மஞ்சூர் : நஞ்சநாடு அரசு மேல்நிலைப்பள்ளி என்.சி.சி., மாணவர்கள் சார்பில்
பிளாஸ்டிக் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.பள்ளி
தலைமையாசிரியர் லட்சுமணன் தலைமை வகித்து துவக்கி வைத்தார்.
பள்ளியில்
துவங்கிய கப்பத்தொரை வழியாக சென்று பள்ளி வளாகத்தை வந்தடைந்தது.
பிளாஸ்டிக் எதிர்ப்பு குறித்து மாணவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
என்.சி.சி., அலுவலர் சுப்பிரமணி ஏற்பாடுகளை செய்தார்.