Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/மின்மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சினால் குற்றவியல் நடவடிக்கை :மாநகர கமிஷனர் எச்சரிக்கை

மின்மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சினால் குற்றவியல் நடவடிக்கை :மாநகர கமிஷனர் எச்சரிக்கை

மின்மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சினால் குற்றவியல் நடவடிக்கை :மாநகர கமிஷனர் எச்சரிக்கை

மின்மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சினால் குற்றவியல் நடவடிக்கை :மாநகர கமிஷனர் எச்சரிக்கை

ADDED : செப் 19, 2011 11:55 PM


Google News

திருநெல்வேலி : நெல்லையில் மின் மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சினால் சம்பந்தப்பட்ட குடிநீர் இணைப்பு துண்டிப்பதோடு, குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி கமிஷனர் அஜய்யாதவ் தெரிவித்துள்ளார்

.

இது குறித்து அவர் அறிக்கையில் கூறியிருப்பதாவது; மேலப்பாளையம் மண்டலத்திற்குட்பட்ட என்.ஜி.ஓ.'ஏ' காலனி, என்.ஜி.ஓ.'பி'காலனி, பெருமாள்புரம், தியாகராஜநகர், ஆமீன்புரம், குலவணிகர்புரம், குறிச்சி உட்பட பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் சீராக இல்லை என பொதுமக்களிடமிருந்து புகார்கள் வந்துள்ளன.

மேற்கண்ட பகுதியில் குடியிருக்கும் பொதுமக்களுக்கு போதுமான அளவு குடிநீர் வழங்க மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதில் 19, 26 மற்றும் 27 வது வார்டுகளுக்கு குடிநீர் தட்டுப்பாடின்றி வழங்க புதிய குடிநீர் மேம்பாட்டு திட்டம் வரும் அக்டோபர் மாதம் 3வது வாரத்தில் நடைமுறைக்கு வரவுள்ளது. அதுவரை குடிநீர் தட்டப்பாடு நிலவும் வாய்ப்புள்ளது. மேற்படி திட்டம் செயல்பாட்டிற்கு வந்தவுடன் தியாகராஜநகர், பெருமாள்புரம், என்.ஜி.ஓ., 'ஏ' மற்றும் 'பி'காலனி, கனரா பாங்க் காலனி, குமரேசன்நகர் மற்றும் சில பகுதிகளுக்கு போதுமான குடிநீர் வழங்க முடியும். இதுதவிர மேலப்பாளையம் முதல் கொண்டாநகரம் வரையிலான 16 கி.மீ நீளத்தில் அமைந்துள்ள நீரேற்றும் குழாயில் பல இடங்களில் கசிவுகள் உள்ளன. இதனால் பழைய குழாய்களை மாற்றிபுதிய இரும்பு குழாய்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.



இருப்பினும் மேலப்பாளையம் பகுதியில் ஏற்படும் குடிநீர் பிரச்னைகளை தீர்க்க நெல்லை மாநகர செயற்பொறியாளர் தலைமையில் மண்டல உதவி செயற்பொறியாளர் மற்றும் 3 ஜூனியர் இன்ஜினியர்கள் கொண்ட உயர்மட்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. மேற்படி குழு மேலப்பாளையம் பகுதியில் ஏற்படும் குடிநீர் தொடர்பான பிரச்னைகளை தீர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே பொதுமக்கள் 94426-41123, 94422-01325 என்ற செல்போன் எண்களில் தொடர்பு கொண்டு குடிநீர் பிரச்னையை தெரிவிக்கலாம். பொதுமக்கள் தங்கள் வீட்டில் விதிமுறைகளுக்கு புறம்பாக மின் மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சினால் குடிநீர் இணைப்பு துண்டிப்பதோடு, குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு நெல்லை மாநகராட்சி கமிஷனர் அஜய் யாதவ் அறிக்கையில் கூறியுள்ளார்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us