Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கல்லூரி மாணவர்கள் 8,110 பேருக்கு இலவச "லேப்-டாப்'

கல்லூரி மாணவர்கள் 8,110 பேருக்கு இலவச "லேப்-டாப்'

கல்லூரி மாணவர்கள் 8,110 பேருக்கு இலவச "லேப்-டாப்'

கல்லூரி மாணவர்கள் 8,110 பேருக்கு இலவச "லேப்-டாப்'

ADDED : செப் 16, 2011 02:49 AM


Google News
கோவை:தமிழக அரசின் இலவச லேப்-டாப் கம்ப்யூட்டர் பெற, கோவை மாவட்டத்தில் 8,110 பேர், திருப்பூர் மாவட்டத்தில் 4599 பேர், நீலகிரி மாவட்டத்தில் 2,549 கல்லூரி மாணவ, மாணவியர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வரும் 18ல் நடைபெறும் நலத்திட்ட விழாவில் அமைச்சர் வேலுமணி முதல் கட்டமாக 127 மாணவர்களுக்கு லேப்-டாப் கம்ப்யூட்டர்களை வழங்குகிறார்.அ.தி.மு.க., கட்சி தனது தேர்தல் அறிக்கையில் உறுதி அளித்திருந்த 'இலவச லேப்-டாப்' வழங்கும் திட்டம், அண்ணாதுரையின் பிறந்த நாளன்று துவக்கி வைக்கப்படவுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரி மாணவர்கள் மற்றும் அரசு, அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மட்டுமே இத்திட்டத்தில் பயன் பெற தகுதியுள்ளவர்கள்.தகுதியுள்ள மாணவர்களை அடையாளம் காண, கலெக்டர் தலைமையில் மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், கல்லூரி கல்வி இணை இயக்குனர் ஆகியோர் உள்ளிட்ட கமிட்டி ஏற்படுத்தப்பட்டது.

திட்டத்தில் பயன் பெறும் மாணவர்களை கணக்கெடுக்கும் பொறுப்பு கல்லூரி கல்வி இணை இயக்குனரிடமும், பள்ளி மாணவர்களை கணக்கெடுக்கும் பொறுப்பு முதன்மை கல்வி அலுவலரிடமும் ஒப்படைக்கப்பட்டது. கணக்கெடுப்பின் முடிவில், கோவை மாவட்டத்தில் மொத்தம் 18 ஆயிரத்து 917 பிளஸ் 2 மாணவர்களும், 8,110 கல்லூரி மாணவ மாணவியரும் 'லேப்-டாப்' பெற தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கல்லூரிகளில் இத்திட்டம் முதலாம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு முதல் கட்டமாக வழங்கப்படுகிறது. கோவை மாவட்டத்தில் ஒரு அரசு கலைக் கல்லூரி மற்றும் எட்டு அரசு உதவி பெறும் கல்லூரிகள் உள்ளன. அரசு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு இளநிலை மாணவர்கள் 1,206 பேர், மூன்றாம் ஆண்டு மாணவர்கள் 1,036 மாணவர்கள் என மொத்தம் 2,242 பேருக்கு லேப்-டாப் வழங்கப்படுகிறது. அரசு உதவி பெறும் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்கள் 3,096 பேர்,மூன்றாம் ஆண்டு மாணவர்கள் 2,772 மாணவர்கள் என மொத்தம் 5,868 மாணவர்களுக்கு லேப்-டாப் வழங்கப்படுகிறது.

கோவை அரசு கலைக் கல்லூரி தெற்கு தொகுதியில் அமைந்துள்ளதால், இத்தொகுதியில்தான் அதிக மாணவர்கள் லேப்-டாப் பெறுகின்றனர். இதற்கு அடுத்தபடியாக சிங்காநல்லூர் தொகுதியில் 2,520 மாணவர்களும், தொண்டாமுத்தூர் தொகுதியில் 505 மாணவர்களும், கவுண்டம்பாளையம் தொகுதியில் 1,080 மாணவர்களும், பொள்ளாச்சி தொகுதியில் 1,043 மாணவர்களும் லேப்-டாப் கம்ப்யூட்டர் பெறுகின்றனர்.திருப்பூர் மாவட்டம்: திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் 540 பேர், மூன்றாம் ஆண்டு மாணவர்கள் 405 பேர் என மொத்தம் 945 பேரும், எல்.ஆர்.ஜி.அரசு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் 784 பேர், மூன்றாம் ஆண்டு மாணவர்கள் 737 பேர் என மொத்தம் 1,521 மாணவர்கள், உடுமலை அரசு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் 760 பேர், மூன்றாம் ஆண்டு மாணவர்கள் 637 பேர் என மொத்தம் 1,397 மாணவர்கள் லேப்-டாப் பெற தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை ஜி.வி.ஜி. விசாலாட்சி மகளிர் கல்லூரி மட்டுமே அரசு உதவி பெறும் ஒரே கல்லூரி. இக்கல்லூரியில் முதலாம் ஆண்டில் 339 பேரும், மூன்றாம் ஆண்டில் 347 பேரும் என மொத்தம் 686 பேர் லேப்-டாப் பெறுகின்றனர். ஆக, திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 4,599 பேர் இத்திட்டத்தில் பயன் பெறுகின்றனர்.நீலகிரி மாவட்டம்: நீலகிரி மாவட்டத்தில் ஒரு அரசு கலைக் கல்லூரியும், இரண்டு அரசு உதவி பெறும் கல்லூரிகளும் உள்ளன. இதில் ஊட்டி அரசு கலைக் கல்லூரியில் 1,686 மாணவர்களும், ஊட்டி எமரால்டு ஹைட்ஸ் பெண்கள் கல்லூரியில் 318 பேர், குன்னூர் பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரி மாணவியர் 545 பேர் என மொத்தம் இம்மாவட்டத்தில் 2,549 பேர் இத்திட்டத்தில் பயன் பெறுகின்றனர்.கோவை கணபதி அரசு மேல்நிலைப் பள்ளியில் வரும் 18ல் நடைபெறும் நலத்திட்டங்கள் வழங்கும் விழாவில், தொழில் துறை அமைச்சர் வேலுமணி லேப்-டாப் உள்ளிட்ட இலவச பொருட்களை வழங்குகிறார். திட்டத்தை துவக்கி வைக்கும் விதமாக, இவ்விழாவில் 127 மாணவர்களுக்கு மட்டும் லேப்-டாப் கம்ப்யூட்டர் வழங்கப்படுகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us