திமுகவுக்கு மாற்று தேஜ தான்: அண்ணாமலை உறுதி
திமுகவுக்கு மாற்று தேஜ தான்: அண்ணாமலை உறுதி
திமுகவுக்கு மாற்று தேஜ தான்: அண்ணாமலை உறுதி

தொடர்ந்து முயற்சி
மதுரையில் அவர் அளித்த பேட்டி: தினகரனும், பன்னீர்செல்வமும் தேஜ கூட்டணியில் இருக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். இரண்டு பேரிடமும் பேச வாய்ப்பு கிடைக்கும் போது எல்லாம் இதனையே சொல்லி வருகிறேன். அவர்கள் ஒரு முடிவு எடுத்து உள்ளனர். அவர்களுக்கு என கொஞ்சம் காலம் வேண்டும். சற்று பொறுத்து இருப்போம். எங்கள் முயற்சியை தொடர்ந்து செய்வோம்.
களத்தில்
அரசியலை 24 மணி நேரமும் செய்ய வேண்டும். அரசியல் என்பது முழு நேர வேலை. முதல்வர், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், அமைச்சர்கள், கட்சி தலைவர்கள் 24 மணி நேரமும் களத்தில் இருக்க வேண்டும்.மக்களுக்கு மாற்றம் தரும் கட்சி என தவெக கூறுமானால், அதே வேகத்தை களத்தில் 24 மணி நேரமும் பார்க்க வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள். சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் மக்களை பார்ப்பேன். மற்ற நாட்களில் மக்களை பார்க்க மாட்டேன் என புதிய கட்சி, பொறுப்பு மிக்க தலைவர் சொன்னால், மக்கள் சோதனை செய்வார்கள். திமுகவுக்கு நாங்கள் எதிரி என தவெக பறைசாற்றினால், அந்த வேகத்தை களத்தில் காட்டும் போது தான் மக்கள் நம்புவார்கள்.
தினமும் கூட்டம்
திமுகவுக்கு மாற்று தேஜ கூட்டணி தான் என மக்கள் நம்புகிறார்கள். எதிர்பார்க்கிறார்கள். தேஜ தலைவர்கள் களத்தில் இருக்கிறார்கள். யாரை வேண்டுமானாலும் எப்போதும் சந்திக்கலாம். அதிமுக பொதுச்செயலர் பிரசாரத்தில் உள்ளார். பாஜ தலைவர்கள் தினமும் கூட்டம் நடத்துகிறார்கள்.
அரசு எதிர்ப்பு
மக்கள் எதிர்ப்பு அலை நவம்பர், டிசம்பரில் தெரிய வர வேண்டும். அது தான் முக்கியம். முன்னதாகவே உச்சம் தொடக்கூடாது. ஜனவரி பிப்ரவரியில் உச்சம் தொட்டால் தான் தேர்தல் வரை கொண்டு செல்ல முடியும்.