ADDED : ஜூலை 27, 2011 11:14 PM
கடலூர் : அரசு பஸ் மோதியதில் கூலித் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.கடலூரை அடுத்த பில்லாலி திரவுபதியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மன்னார், 35; கூலித் தொழிலாளி.இவர் நேற்று காலை கடலூரிலிருந்து பில்லாலிக்கு சைக்கிளிலில் சென்று கொண்டிருந்தார்.கோண்டூர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த அரசு பஸ் மோதியது.
இதில் படுகாயமடைந்த மன்னார் அதே இடத்தில் இறந்தார்.