/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/மனுநீதிநாள் கூட்டத்தில் நல திட்ட உதவிகள்மனுநீதிநாள் கூட்டத்தில் நல திட்ட உதவிகள்
மனுநீதிநாள் கூட்டத்தில் நல திட்ட உதவிகள்
மனுநீதிநாள் கூட்டத்தில் நல திட்ட உதவிகள்
மனுநீதிநாள் கூட்டத்தில் நல திட்ட உதவிகள்
ADDED : ஜூலை 24, 2011 02:45 AM
பந்தலூர் : பந்தலூர் அருகே சேரங்கோடு பகுதியில் நடந்த மனுநீதிநாள் முகாமில் 1லட்சத்து 57ஆயிரம் ரூபாய் மதிப்பினாலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.சேரங்கோடு சமுதாய கூடத்தில் நடந்த மனுநீதிநாள் முகாமில் தாசில்தார் பாபு வரவேற்றார்.
சமூக நலத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, ஆதிதிராவிடர் நலத்துறை உள்ளிட்ட துறைகளில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. மாவட்ட வருவாய் அலுவலர் நிர்மல்ராஜ் பேசினார்.தொடர்ந்து, ஏற்கனவே பொதுமக்களிடமிருந்து பெற்ற 19மனுக்கள் மீதான நடவடிக்கைகள் மேற்கொண்டது குறித்து விளக்கப்பட்டது.
இயற்கை மரணமடைந்த 12 பேரின் குடும்பத்தினருக்கு தலா 12 ஆயிரத்து 500 ரூபாய், திருமண உதவி ஒருவருக்கு 5 ஆயிரம் ரூபாய், முதிர்கன்னி உதவித்தொகை இருவருக்கு ஆயிரம் ரூபாய், விதவை உதவித்தொகை ஒருவருக்கு ஆயிரம் ரூபாய், மழையால் வீடிழந்த மூவருக்கு 2 ஆயிரத்து 500 ரூபாய் என மொத்தம் 1 லட்சத்து 57ஆயிரத்து 500 ரூபாய்க்கான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.ரேஷன்கார்டு கோரி விண்ணப்பித்த 6 பேருக்கு கார்டுகளும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், கூடலூர் எம்.எல்.ஏ. திராவிடமணி உட்பட பலர் கலந்து கொண்டனர். வருவாய் அலுவலர் மோகன் நன்றி கூறினார்.


