/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/திருப்பூரில் "முத்தூட்' நகை அடகு கடையில் துணிகர கொள்ளை * ஊழியர்களை கட்டி போட்டு ரூ.3 கோடி நகை "அபேஸதிருப்பூரில் "முத்தூட்' நகை அடகு கடையில் துணிகர கொள்ளை * ஊழியர்களை கட்டி போட்டு ரூ.3 கோடி நகை "அபேஸ
திருப்பூரில் "முத்தூட்' நகை அடகு கடையில் துணிகர கொள்ளை * ஊழியர்களை கட்டி போட்டு ரூ.3 கோடி நகை "அபேஸ
திருப்பூரில் "முத்தூட்' நகை அடகு கடையில் துணிகர கொள்ளை * ஊழியர்களை கட்டி போட்டு ரூ.3 கோடி நகை "அபேஸ
திருப்பூரில் "முத்தூட்' நகை அடகு கடையில் துணிகர கொள்ளை * ஊழியர்களை கட்டி போட்டு ரூ.3 கோடி நகை "அபேஸ
திருப்பூர் :திருப்பூரில் முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில், நேற்று காலை புகுந்த, ஆறு பேர் கொண்ட கும்பல், ஊழியர்களை கட்டி போட்டு, 3 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்து சென்றது.திருப்பூர் காங்கயம் ரோடு பத்மினி கார்டன் அருகில், 'முத்தூட் பைனான்ஸ் பின்கார்ப்' - நிறுவனம் செயல்படுகிறது; நேற்று காலை 8.30 மணிக்கு, நிறுவனத்தின் மேலாளர் மதிவாணன் கதவை திறந்து உள்ளே சென்றார்.
நோட்டமிட்ட திருடர்கள் :கொள்ளையில் ஈடுபட்ட நபர்கள், கடந்த 22ம் தேதி மாலை, 4.45 மணிக்கு வந்துள்ளனர். மூன்று பேர் வந்து, ஆறு சவரன் நகையை அடகு வைக்க வேண்டும்; நகையை நண்பர்கள் கொண்டு வருவதாக கூறியபடி, நோட்டமிட்டுள்ளனர்.மாலை, 5.00 மணி ஆனதால், நகையை மறுநாள் அடகுவைத்து கொள்வதாக கூறிவிட்டு சென்றுள்ளனர். கொள்ளையடித்தவர்களில் மூன்று பேர், 22ம் தேதி மாலையில் வந்தவர்கள்; அடையாளம் தெரியும் என அங்கிருந்த ஊழியர்கள், போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.
பாதுகாப்பில் அலட்சியம்:பல கோடி ரூபாய் மதிப்பிலான, ஆயிரக்கணக்கான சவரன் நகைகள் வைக்கப்பட்டிருந்த முத்தூட் பின் கார்ப் பைனான்சில், போதிய பாதுகாப்பு ஏற்பாடு இல்லை. செக்யூரிட்டி ஆள் இல்லை.அலுவலகத்திற்கு உள்ளேயும், வெளியேயும் எங்கேயும் வந்து செல்லும் வாடிக்கையாளர்களை வீடியோ எடுக்கும் வகையில், 'சிசிடிவி' கேமரா, அபாய சைரன் உள்ளிட்ட எந்த விதமான பாதுகாப்பு ஏற்பாடும் இல்லை. கொள்ளை சம்பவத்தை கேள்விபட்டு, முத்தூட் பின் கார்ப் பைனான்ஸ் அலுவலகத்தை, அடகு வைத்த பலர் முற்றுகையிட்டனர்; போலீசாரை மீறி அலுவலகத்துக்குள் நுழைய முயற்சித்ததால், பரபரப்பு ஏற்பட்டது.
'பயப்படத் தேவையில்லை' :முத்தூட் பின் கார்ப் மேலாளர் மதிவாணன் கூறியதாவது:அலுவலகத்தின் முன் பக்க கதவை திறந்தவுடன், பின்னால் வந்தவர்கள், நகை அடகு வைக்க வேண்டும் என கூறினர்; உள்ளே நுழைந்து, என்னை கீழே தள்ளி விட்டு, கையுடன் , காலையும் சேர்த்து வைத்து, கயிறால் கட்டினர்.பையில் வைத்திருந்த சாவியை பிடுங்கிக்கொண்டு, வாயில் துணி திணித்து, டேப் ஒட்டிவிட்டனர். கண்ணையும், காதையும் அடைத்து டேப்பை ஒட்டி விட்டதால், என்ன நடக்கிறது எனக் கூட தெரியவில்லை. 2010, மார்ச் 17 முதல் ஒன்றரை ஆண்டுகளாக பெறப்பட்ட, 1,380 வாடிக்கையாளர்களின் நகைகள் உள்ளே இருந்தன.நகைகளுக்கு இன்சூரன்ஸ் உள்ளது; அடகு வைத்த நகை உரிமையாளர்களுக்கு நகை வழங்கப்படும். அவர்கள், அடகு சீட்டை காண்பித்து தங்களது நகை உள்ளதா என உறுதி செய்து கொள்ளலாம். நகை இல்லாதவர்களுக்கு மாற்று நகையோ அல்லது அதற்குரிய தொகையோ வழங்கப்படும்; நகையை அடகு வைத்தவர்கள் பயப்பட தேவையில்லை.இவ்வாறு மதிவாணன் கூறினார்.