பயிர் சாகுபடியை அதிகரிக்க தமிழக அரசு முடிவு
பயிர் சாகுபடியை அதிகரிக்க தமிழக அரசு முடிவு
பயிர் சாகுபடியை அதிகரிக்க தமிழக அரசு முடிவு
சென்னை : 'தமிழகத்தில் பயிர் சாகுபடியை அதிகரிக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும்' என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசு சட்டசபையில் தாக்கல் செய்த கொள்கை விளக்க குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில், ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி பாசனத்திற்காக திறக்கப்பட வேண்டிய மேட்டூர் அணை, ஜூலை 28ம் தேதி, தாமதமாக திறக்கப்பட்டதால், குறுவை நெல் சாகுபடிப் பரப்பில் குறைவு காணப்பட்டது.
இதனால், பல மாவட்டங்கள் குறிப்பாக, காவிரி பாசனப் பகுதியை உள்ளடக்கிய மாவட்டங்களில், ஆகஸ்டு மாதத்தில் சாகுபடி செய்ய வேண்டிய சம்பா நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டதோடு, 50 சதவீதத்திற்கும் அதிகமான உற்பத்தி இழப்பு ஏற்பட்டது. சென்ற ஆண்டு, 60.50 லட்சம் எக்டேர், பயிர் சாகுபடி மற்றும் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், 46.40 லட்சம் எக்டேர் மட்டுமே உற்பத்தி செய்ய முடிந்தது. நடப்பாண்டில், 53.50 லட்சம் எக்டேர் பயிர் சாகுபடி மற்றும் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இலக்கை அடைவதற்கான