காமன்வெல்த் போட்டி முறைகேடு: சி.பி.ஐ புது வழக்கு
காமன்வெல்த் போட்டி முறைகேடு: சி.பி.ஐ புது வழக்கு
காமன்வெல்த் போட்டி முறைகேடு: சி.பி.ஐ புது வழக்கு
UPDATED : செப் 14, 2011 12:28 PM
ADDED : செப் 14, 2011 11:52 AM
புதுடில்லி: காமன்வெல்த் போட்டிகளில் நடந்த முறைகேடு தொடர்பாக விசாரித்து வரும் சி.பி.ஐ.யின் சிறப்பு விசாரணைக்குழுவினர் புதிய வழக்கினை பதிவு செய்துள்ளனர்.
இதன்படி டில்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களில் சி.பி.ஐ. ரெய்டு நடந்தது. கடந்த ஆண்டு அக்டோபர் டில்லியின் நடந்த காமன்வெல்த் போட்டிகளில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாரின் பேரில் போட்டியின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் சுரேஷ்கல்மாடி சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் இப்போட்டியின் பல்வேறு கட்டுமானத்துறையில் நடந்த முறைகேடுகள் குறித்து சிறப்பு விசாரணைக்குழுவினர் புதிய வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக . டில்லி, மும்பை உள்ளிட்ட கட்டுமான நிறுவனங்களில் சி.பி.ஐ. ரெய்டு நடத்தியது.