கட்சி வேட்பாளர்களிடம் நுழைவு கட்டணம் வசூலிக்கும் கிராம மக்கள்
கட்சி வேட்பாளர்களிடம் நுழைவு கட்டணம் வசூலிக்கும் கிராம மக்கள்
கட்சி வேட்பாளர்களிடம் நுழைவு கட்டணம் வசூலிக்கும் கிராம மக்கள்
திருவண்ணாமலை : செங்கம் அருகே, ஓட்டு சேகரிக்கச் செல்லும் வேட்பாளர்களிடம், 10 ஆயிரம் ரூபாய் நுழைவுக் கட்டணம் வசூல் செய்து, கிராம மக்கள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த, சி.சொர்ப்பணந்தல் ஊராட்சித் தலைவர் பதவிக்கு, அதே கிராமத்தை சேர்ந்த ஜெயசந்திரன், சந்திரா, பன்னீர்செல்வம், பாண்டியன், சம்பந்தம், நடராஜன், ஆனந்தன், சிவானந்தம், சுப்பிரமணி ஆகிய ஒன்பது பேர் போட்டியிடுகின்றனர்.
இது தவிர, ஒன்றியக் கவுன்சிலர் பதவிக்கு, பலர் போட்டியிடுகின்றனர். ஓட்டு கேட்க சி.சொர்ப்பணந்தல் ஊருக்குள் வரும் வேட்பாளர்களிடம், நிர்ணயிக்கப்பட்ட நுழைவுக் கட்டணத்தை வசூலித்த பின்னரே, கிராம மக்கள், ஓட்டு சேகரிக்க அனுமதிக்கின்றனர்.
ஊராட்சி தலைவர் வேட்பாளர்களிடம், 10 ஆயிரமும், ஒன்றிய கவுன்சிலருக்கு போட்டியிடும் வேட்பாளர்களிடம், 5,000 ரூபாயும் நிர்ணயம் செய்து வசூலித்து வருகின்றனர். இது குறித்து, போலீசாரிடம் கேட்ட போது, 'இதுவரை இது தொடர்பான புகார்கள் எதுவும் வரவில்லை' என்றனர்.


