ADDED : ஜூலை 11, 2011 04:17 AM
துறையூர்: துறையூர் அருகே ஓமாந்தூரில் ரவிச்சந்திரன் என்பவரது கிணற்றில்
ஆண் பிணம் மிதப்பதாக வி.ஏ.ஓ., நாகராஜ் புலிவலம் போலீஸாருக்கு தகவல்
தெரிவித்தார்.
புலிவலம் எஸ்.ஐ., சுந்தரராஜன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து
பிணத்தை பொதுமக்கள் உதவியுடன் மேல கொண்டு வந்தனர். அப்போ து, அதே ஊரைச்
சேர்ந்த முத்துகவுண்டர் மகன் கிருஷ்ணமூர்த்தி (36) என்பதும், இரவில் குடிபே
õதையில் வந்த கிருஷ்ணமூர்த்தி தவறி கிணற்றுக்குள் விழுந்து இருக்கலாம் என
போலீஸார் விசாரணையில் தெரியவந்தது.எனினும், தொடர்ந்து போலீஸார் விசாரித்து
வருகின்றனர்.