ஹசாரேவுக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம்
ஹசாரேவுக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம்
ஹசாரேவுக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம்
ADDED : ஆக 24, 2011 12:46 AM
சென்னை : ஊழலுக்கு எதிராக, உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும், அன்னா ஹசாரேக்கு ஆதரவாக, திருவொற்றியூர் கோர்ட் வழக்கறிஞர்கள், கோர்ட்டுகளைப் புறக்கணித்து<, உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
திருவொற்றியூர் நகராட்சி எதிரே நடந்த உண்ணாவிரதத்திற்கு, வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஜெயசீலன் தலைமை வகித்தார். மூத்த வழக்கறிஞர் தமிழரசன், உண்ணாவிரதத்தைத் துவக்கி வைத்தார். உண்ணாவிரதம் மாலை வரை நீடித்தது. சங்க நிர்வாகிகள் ஜெயக்குமார், வெங்கடேசன், செந்தில்ராஜா, அம்பிகைதாஸ் உள்ளிட்ட ஏராளமான வழக்கறிஞர்கள் இதில் பங்கேற்றனர்.