Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/"மாஜி.,' மீது வழக்கு

"மாஜி.,' மீது வழக்கு

"மாஜி.,' மீது வழக்கு

"மாஜி.,' மீது வழக்கு

ADDED : அக் 02, 2011 01:50 AM


Google News

திருப்பூர் : மாநகராட்சி தேர்தலில் 'சீட்' தராததால் மறியலில் ஈடுபட்ட அ.தி.மு.க., முன்னாள் கவுன்சிலர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.திருப்பூர் மாநகராட்சி 46வது வார்டு அ.தி.மு.க., முன்னாள் கவுன்சிலர் தேவராஜ்; மாநகராட்சி தேர்தலில் கவுன்சிலருக்கு போட்டியிட கட்சி தலைமை, அவருக்கு வாய்ப்பளிக்கவில்லை.

தனக்கு 'சீட்' தராததை கண்டித்து, தன் ஆதரவாளர்களுடன் கடந்த 29ம் தேதி காலை, காங்கயம் கிராஸ் ரோடு, சிக்னல் அருகில் சாலைமறியலில் ஈடுபட்டார்; போக்குவரத்து பாதித்தது.இதுகுறித்து வி.ஏ.ஓ., முத்துசாமி புகார் அளித்தார்; தெற்கு போலீசார், ஐ.பி.சி., 143 (சட்ட விரோதமாக கூடுதல்) 188 (பொது மக்களுக்கு இடையூறு) ஆகிய பிரிவுகளின் கீழ், முன்னாள் கவுன்சிலர் தேவராஜ் மற்றும் 37 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us