Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/பொள்ளாச்சி அருகே பஸ் கவிழ்ந்தது : மாணவிகள் உட்பட 16 பேர் காயம்

பொள்ளாச்சி அருகே பஸ் கவிழ்ந்தது : மாணவிகள் உட்பட 16 பேர் காயம்

பொள்ளாச்சி அருகே பஸ் கவிழ்ந்தது : மாணவிகள் உட்பட 16 பேர் காயம்

பொள்ளாச்சி அருகே பஸ் கவிழ்ந்தது : மாணவிகள் உட்பட 16 பேர் காயம்

ADDED : செப் 17, 2011 12:20 AM


Google News
பொள்ளாச்சி: சுற்றுலா பஸ் கவிழ்ந்ததில், திருச்சியைச் சேர்ந்த கல்லூரி மாணவியர் 13 பேர் உட்பட, 16 பேர் காயமடைந்தனர்.

திருச்சி தனியார் கலை அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர்கள் நான்கு பேர் தலைமையில், மூன்று பஸ்களில் 150 மாணவியர், நேற்று முன் தினம் மதியம் 11.00 மணிக்கு, குருவாயூர், மலம்புழா, கொச்சிக்கு சுற்றுலா புறப்பட்டனர். நேற்று அதிகாலை 4.00 மணிக்கு, பொள்ளாச்சி அருகே வந்த பஸ், கட்டுப்பாட்டை இழந்து, ரோட்டில் கவிழ்ந்தது. மாணவியர் அலறியதைக் கேட்டு, அவ்வழியாக வாகனங்களில் வந்தவர்கள் அவர்களை மீட்டனர். கோமங்கலம் போலீசாரும், உடுமலை தீயணைப்புத் துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். கிரேன் உதவியுடன், கவிழ்ந்த பஸ்சை தூக்கி, அப்பகுதியில் போக்குவரத்து சீர் செய்யப்பட்டது. விபத்தில் காயமடைந்த கல்லூரி பேராசிரியர், டிரைவர்கள் மற்றும் மாணவியர் உட்பட எட்டுப் பேர், கோவையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். லேசான காயமடைத்த மாணவியர் எட்டுப் பேருக்கு, முதலுதவி சிகிச்சை பெற்று திருச்சி திரும்பினர். கோமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us