Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ஓணம் வந்நல்லோ... ஓணம் வந்நல்லோ...: இன்று ஓணம் பண்டிகை

ஓணம் வந்நல்லோ... ஓணம் வந்நல்லோ...: இன்று ஓணம் பண்டிகை

ஓணம் வந்நல்லோ... ஓணம் வந்நல்லோ...: இன்று ஓணம் பண்டிகை

ஓணம் வந்நல்லோ... ஓணம் வந்நல்லோ...: இன்று ஓணம் பண்டிகை

ADDED : செப் 08, 2011 11:20 PM


Google News
Latest Tamil News

கேரள மக்களால் சாதி, மத வேறுபாடின்றி கொண்டாடப்படும் பண்டிகை ஓணம்.

இதை கேரளாவின் 'அறுவடைத் திருநாள்' என்றும் அழைப்பர். மலையாள ஆண்டின் சிங்கம் மாதத்தில் ஹஸ்த்தம் நட்சத்திரத்தில் துவங்கி, திருவோணம் நட்சத்திரம் வரை இருக்கும் 10 நாட்கள் ஓணமாக கொண்டாடப்படுகிறது. இதை 'கேரளாவின் பொங்கல்' என்றும் கூறலாம்.



10 நாள் திருவிழா: பத்து நாட்கள் நடைபெறும் திருவிழாவில், ஒவ்வொரு நாளுக்கும் தனித்தனி பெயர் கொடுத்து கொண்டாடுகிறார்கள். ஓணம் பண்டிகையின் முதல் நாள் அத்தம் , இரண்டாம் நாள் சித்திர், மூன்றாம் நாள் சுவாதி என்றும் அழைக்கப்படும். அன்று மக்கள் ஒருவருக்கொருவர் பரிசுகள் அளித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வர். நான்காம் நாளான விசாகத்தில், ஒன்பது சுவைகளில் உணவு தயார் செய்யப்படுகிறது. குறைந்த பட்சம் 64 வகையான உணவு வகை இந்த பட்டியலில் இடம் பெற்றிருக்கும். ஐந்தாம் நாள் அனுஷம் எனப்படும். அன்று, கேரளாவின் பாரம்பரியமான படகுப்போட்டி நடத்தப்படுகிறது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால், இந்த போட்டியில் பங்கு பெறுவோர் வஞ்சிப்பாட்டு என்ற பாடலை பாடிக்கொண்டு படகை செலுத்துவர். ஆறாம் நாள் திருகேட்டை , ஏழாம், எட்டாம் மற்றும் ஒன்பதாம் நாட்கள் முறையே மூலம், பூராடம், உத்திராடம் என்று அழைக்கப்படும். பத்தாம் நாள் திருவோணம் என்ற கொண்டாட்டத்துடன் முடிகிறது.



மன்னனுக்கான கொண்டாட்டம்: மஹாபலி என்ற மன்னர் கேரளத்தை சிறப்போடு ஆண்டு வந்தார். தானம், தருமங்கள் செய்வதில் சிறந்து விளங்கிய இந்த மன்னனை நினைவு கூர்ந்து, மீண்டும் வரவேற்கும் வகையில் இந்த திருவிழா ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது. ஓணம் பண்டிகையின் சிறப்பம்சம் வீட்டின் வாசலில் போடப்படும் பூக்கோலம். ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள ஆண்பிள்ளைகள் அத்தப்பூ என்ற பூவை பறித்துக் கொண்டு வருவர். பூக்கோலத்தில் அதை தான் முதலில் வைக்க வேண்டும் என்பது ஐதீகம். அதன் பின், தினமும் வெவ்வேறு பூக்களுடன் கோலத்தை அழகுபடுத்துவர். பத்தாம் நாள், பூக்கோலத்தின் அளவு பெரிதாக இருக்கும்.



சிறப்பு உணவுகள்: கேரள உணவுகள் என்றதுமே, புட்டு, கிழங்கு, பயறு என்பவை நினைவுக்கு வரும். ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு உணவுகள் தயார் செய்யப்படும். புது அரிசி மாவில் தயார் செய்யப்பட்ட அடை, அவியல், அடை பிரதமன், பால் பாயாசம், எரிசேரி, மிளகாய் அவியல், பரங்கிக்காய் குழம்பு என உணவுகள் தயார் செய்யப்பட்டு கடவுளுக்கு படைக்கப்படும்.



விளையாட்டுகள்: ஓணம் பண்டிகையை முன்னிட்டு, அத்தப்பூக்கோலம், கயிறு இழுத்தல், களறி, படகுப்போட்டிகள், பாரம்பரிய நடனப் போட்டிகள் என 10 நாட்களும் பல விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us