Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/கூட்டுறவுத் துறை முறைகேடு மீது நடவடிக்கை

கூட்டுறவுத் துறை முறைகேடு மீது நடவடிக்கை

கூட்டுறவுத் துறை முறைகேடு மீது நடவடிக்கை

கூட்டுறவுத் துறை முறைகேடு மீது நடவடிக்கை

ADDED : ஆக 22, 2011 11:02 PM


Google News

சென்னை : சட்டசபையில் கூட்டுறவுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு, அமைச்சர் செல்லூர் ராஜு பேசியதாவது: கடந்த ஆட்சியில் மதுரை மக்கள் துயரத்தில் இருந்தனர்.

மூன்று இடைத்தேர்தல்களிலும் தில்லு முல்லு நடந்தது. இட்லி கடை முதல் நகைக் கடை வரை அட்டூழியம் நடந்தது. அத்தனையையும் மாற்றி, தமிழக மக்களுக்கு ஒரு புதிய சுதந்திரத்தை முதல்வர் பெற்றுத் தந்துள்ளார். கடந்த 1996 முதல் 2001ம் ஆண்டு வரை, 2006 முதல் 2011ம் ஆண்டு வரையிலான தி.மு.க., ஆட்சியில், கூட்டுறவுத் துறையில் கோடிக்கணக்கான ரூபாய்க்கு முறைகேடுகள் நடந்துள்ளன. துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும், என்றார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us