Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ரேபரேலியா? வயநாடா? குழப்பமாக உள்ளது என்கிறார் ராகுல்

ரேபரேலியா? வயநாடா? குழப்பமாக உள்ளது என்கிறார் ராகுல்

ரேபரேலியா? வயநாடா? குழப்பமாக உள்ளது என்கிறார் ராகுல்

ரேபரேலியா? வயநாடா? குழப்பமாக உள்ளது என்கிறார் ராகுல்

UPDATED : ஜூன் 12, 2024 03:17 PMADDED : ஜூன் 12, 2024 12:42 PM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

வயநாடு: வயநாடு அல்லது ரேபரேலி தொகுதிகளில் எந்த தொகுதியில் எம்.பி.,யாக நீடிப்பது என்பதில் குழப்பமாக உள்ளது என காங்கிரஸ் எம்.பி.,ராகுல் கூறியுள்ளார்.

நன்றி


லோக்சபா தேர்தலில் உ.பி., மாநிலம் ரேபரேலி மற்றும் கேரள மாநிலம் வயநாட்டில் வெற்றி பெற்றார். இரண்டில் ஒன்றை அவர் ராஜினாமா செய்ய வேண்டும். இது குறித்து விரைவில் முடிவு அறிவிக்கப்படும் என காங்கிரஸ் கூறியுள்ளது. நேற்று ( ஜூன் 11) ரேபரேலி சென்ற ராகுல் வாக்காளர்களை சந்தித்து நன்றி தெரிவித்தார்.

உத்தரவிட முடியாது


இன்று கேரள வந்த ராகுல், மலப்புரம் பகுதியில் நடந்த பேரணியில் பங்கேற்றார். தொடர்ந்து அங்கு நடந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது: நாட்டில் உள்ள ஒவ்வொரு வரலாறும் பாரம்பரியமும் நமது அரசியல் சாசனத்தை பாதுகாக்கிறது. தங்களுக்கு என்ன வேண்டும் என்பது குறித்தும், இந்திய மக்களுக்கும் பிரதமர் உத்தரவிட முடியாது என்பதை கேரளா, உ.பி., உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் எடுத்து காட்டி உள்ளன.

அரசியல்சாசனம் எங்களது குரல். அதனை தொடாதீர்கள் எனவும் பிரதமரிடம் மக்கள் தெரிவித்துள்ளனர். தேர்தலுக்கு முன்னர், அரசியல் சாசனத்தை கிழிப்போம் என பா.ஜ., வினர் பிரசாரம் செய்னர். ஆனால் தேர்தலுக்கு பின் அரசியல் சாசனத்தை பிரதமர் வணங்கினார். வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி நூலிலையில் வெற்றி பெற்றார். அங்கு அவர் தோற்கடிக்கப்பட்டு இருப்பார். அயோத்தியில் பா.ஜ., தோல்வி அடைந்துள்ளது. இதன் மூலம், வன்முறை மற்றும் வெறுப்புணர்வை நாங்கள் ஆதரிக்க மாட்டோம் என அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். இவ்வாறு ராகுல் பேசினார்.

எந்த முடிவு

பிறகு வயநாட்டில் நடந்த கூட்டத்தில் ராகுல் பேசியதாவது: இரண்டாவது முறையாக என்னை வெற்றி பெற வைத்த வாக்காளர்களுக்கு நன்றி. அரசியல்சாசனத்தை பாதுகாக்கவே, 2024 லோக்சபா தேர்தல் நடந்தது. அன்பு மற்றும் பாசத்தால், வெறுப்புணர்வு தோற்கடிக்கப்பட்டது. அடக்கத்தால், ஆணவம் தோற்கடிக்கப்பட்டது.

மக்களே எனது கடவுள்

துரதிஷ்டவசமாக பிரதமர் மோடியை போல் நான் கடவுளால் வழிநடத்தப்படுபவன் அல்ல. நான் சாதாரண மனிதன். ஏழை மக்களே எனது கடவுள். வயநாடு மக்களே எனது கடவுள். என்னை பொறுத்தவரை, நான் மக்களுடன் பேசுவேன். நான் என்ன செய்ய வேண்டும் என அவர்கள் கூறுவர். வயநாடு அல்லது ரேபரேலி தொகுதிகளில், எதில் எம்.பி.,யாக நீடிக்க வேண்டும் என்பதில் குழப்பம் உள்ளது. எந்த முடிவு எடுத்தாலும் இரு தொகுதி மக்களும் மகிழ்ச்சி அடைவார்கள்.

தேர்தலின் போது, பா.ஜ., 400க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என மோடி கூறினார். பிறகு 400 மறைந்து 300 ஆனது. இதன் பிறகு, நான் பயாலிஜிக்கலாக பிறக்கவில்லை. இதனை தனதுதாயார் இறந்த பிறகு தான் உணர்ந்ததாக கூறினார். மேலும், நான் எந்த முடிவும் எடுப்பது கிடையாது. இந்த பூமிக்கு என்னை கொண்டு வந்தது பரமாத்மா. அவர் தான் அனைத்து முடிவுகளையும் எடுக்கிறார்.

மோடியின் பரமாத்மா, அவரை அதானி மற்றும் அம்பானிக்கு ஆதரவாக முடிவு எடுக்க வைக்கிறார். காலை, மோடியிடம், நீங்கள் மும்பை விமான நிலையத்தை அதானியிடம் கொடுக்க போகிறீர்கள் என பரமாத்மா கூறினார். தற்போது ஏழு விமான நிலையங்களை கொடுத்துள்ளீர்கள். தற்போது, மின் நிலையங்களையும் கொடுக்கிறீர்கள். இவ்வாறு ராகுல் பேசினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us