/உள்ளூர் செய்திகள்/திருச்சி/இருவேறு விபத்தில் இரண்டு பெண்கள் சாவுஇருவேறு விபத்தில் இரண்டு பெண்கள் சாவு
இருவேறு விபத்தில் இரண்டு பெண்கள் சாவு
இருவேறு விபத்தில் இரண்டு பெண்கள் சாவு
இருவேறு விபத்தில் இரண்டு பெண்கள் சாவு
ADDED : செப் 27, 2011 11:47 PM
மணச்சநல்லூர்: மணச்சநல்லூரில் நடந்த இருவேறு விபத்துகளில், இரண்டு பெண்கள்
பலியாயினர். மணச்சநல்லூர் பாலாஜி நகரைச் சேர்ந்தவர் சூசைராஜ். கோணிப்பை
வியாபாரி. இவரது மனைவி ஞான மருதம் (35). நேற்று இவர் வங்கியில் பணம் போட
தனது 'டி.வி.எஸ்., எக்ஸெல்' மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.
திருப்பஞ்சலி பிரிவுச்சாலை அருகே சமயபுரம் செல்லும் பாதையில்
திரும்பியபோது, எதிரே வந்த டூவீலரை பார்த்து, காலை ஊன்றி நிற்க முயன்றார்.
முடியாமல் தடுமாறி கீழே விழுந்தார். அப்போது பின்னால் வந்த, மணச்சநல்லூர்
சிதம்பரம்பிள்ளை மகளிர் கல்லூரி பஸ் மோதி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மணச்சநல்லூர் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். மற்றொரு பெண்
பலி: மணச்சநல்லூர் காந்தி நகரைச் சேர்ந்தவர் வீரப்பன்(41) கூலித்தொழிலாளி.
இவரது மனைவி பேபி (37). கட்டிடத்தொழிலாளி. மணச்சநல்லூர் எதுமலை
பிரிவுச்சாலை அருகே பேபி கட்டிடப்பணியில் ஈடுபட்டிருந்தார். நேற்று காலை
10.30 மணியளவில், எதிர்பாராதவிதமாக மூன்றாவது மாடியில் இருந்து கால்தவறி
விழுந்து, சம்பவ இடத்திலேயே இறந்தார். மணச்சநல்லூர் போலீஸார்
விசாரிக்கின்றனர்.