ஜெர்மன் பெண்ணை இந்து முறைப்படி கரம் பிடித்தார் புதுச்சேரி ஏட்டு மகன்
ஜெர்மன் பெண்ணை இந்து முறைப்படி கரம் பிடித்தார் புதுச்சேரி ஏட்டு மகன்
ஜெர்மன் பெண்ணை இந்து முறைப்படி கரம் பிடித்தார் புதுச்சேரி ஏட்டு மகன்
புதுச்சேரி : ஜெர்மன் நாட்டை சேர்ந்த பெண்ணிற்கும், புதுச்சேரி ஏட்டு மகனுக்கும் இந்து முறைப்படி திருமணம் நடந்தது.
அப்போது லூயிசாவிற்கும், கார்த்திகேயனுக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் நெருங்கி பழகினர். இதன் காரணமாக லூயிசா அழைப்பின் பேரில், கார்த்திகேயன் சமீபத்தில் ஜெர்மன் சென்று வந்தார். இதன் தொடர்ச்சியாக இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர்.
இதுபற்றி, இருவரது குடும்பத்தினரும் கலந்து பேசியதன் விளைவாக திருமணத்திற்கு நாள் குறிக்கப்பட்டது. புதுச்சேரி கருவடிக்குப்பத்திலுள்ள, பாரீஸ் திருமண நிலையத்தில் நேற்று காலை 7 மணியளவில், இந்து முறைப்படி ஜெர்மன் பெண்ணான லூயிசாவிற்கு, கார்த்திகேயன் தாலி கட்டினார். லூயிசா இந்து முறைப்படி பட்டுப்புடவை அணிந்திருந்தார். மணமகனின் பெற்றோர் கணேசன்-சித்ரா, மணமகளின் பெற்றோர் திமேத்யூ-பார்பரா உள்ளிட்ட உறவினர்கள் கலந்து கொண்டனர்.