Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/பாளை., அரசு அலுவலர் குடியிருப்பில் குடிநீருக்காக அலையும் பொதுமக்கள்

பாளை., அரசு அலுவலர் குடியிருப்பில் குடிநீருக்காக அலையும் பொதுமக்கள்

பாளை., அரசு அலுவலர் குடியிருப்பில் குடிநீருக்காக அலையும் பொதுமக்கள்

பாளை., அரசு அலுவலர் குடியிருப்பில் குடிநீருக்காக அலையும் பொதுமக்கள்

ADDED : ஜூலை 21, 2011 02:25 AM


Google News

திருநெல்வேலி : பாளை., அரசு அலுவலர் குடியிருப்பு பகுதிகளில் தாமிரபரணி தண்ணீர் கிடைக்காததால் மக்கள் தண்ணீருக்காக அலையவேண்டியுள்ளது.

சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். பாளை., அரசு அலுவலர் குடியிருப்பில் ஏராளமான வீடுகள் உள்ளன. தெருக்களில் 30 ஆண்டுகளுக்கு முன்பு பதிக்கப்பட்ட குழாய்கள் தான் உள்ளது. தெருக்களில் பல இடங்களில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் லீக்கேஜ் ஆகிறது. இதனால் வீடுகளுக்கு தண்ணீர் கிடைப்பதில்லை.



தண்ணீருக்காக மக்கள் குடத்தை தூக்கிக் கொண்டு மற்ற தெருக்களுக்கு அலையவேண்டியுள்ளது. அரசு அலுவலர் குடியிருப்பு 2, 3, 15, 16வது குறுக்கு தெருக்களில் தண்ணீர் வந்து 4 ஆண்டுகள் ஆகிறது. தண்ணீர் சரியாக திறக்கப்படாததால் அரசு அலுவலர் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் கிடைப்பதில்லை. இதுகுறித்து பலமுறை மனுக் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தண்ணீர் வரி மட்டும் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் தண்ணீர் வர எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த விஷயத்தில் மாநகராட்சி அதிகாரிகள் தீவிர கவனம் செலுத்தி அரசு அலுவலர் குடியிருப்பு பகுதிகளுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us