மாஜி அமைச்சரின் சகோதரர் மீது துணை நடிகர் புகார்
மாஜி அமைச்சரின் சகோதரர் மீது துணை நடிகர் புகார்
மாஜி அமைச்சரின் சகோதரர் மீது துணை நடிகர் புகார்

சென்னை : கொலை செய்யும் முயற்சியுடன் தாக்கியதுடன், நகை, பணத்தை பறித்துச் சென்ற மாஜி தி.மு.க., அமைச்சர் சாமியின் சகோதரர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, துணை நடிகர் ஒருவர், போலீஸ் கமிஷனரிடம் மனு அளித்துள்ளார்.
நானும், என் குடும்பத்தினரும் சொந்த வீடு, மனை மற்றும் மீன் தொழில் செய்யும் தொழிற்சாலை போன்றவற்றை விட்டுவிட்டு, அமைச்சரின் சகோதரர்களை எதிர்த்து வாழ முடியாததால் ஓடி வந்துவிட்டோம். நானும் என் குடும்பத்தினரும் திருவொற்றியூர் போலீசில் புகார் அளித்த போது, அவர்கள் எடுத்துக் கொள்ளவில்லை. தொடர்ந்து கடும் முயற்சிக்குப் பின், இரண்டாண்டுகள் கழித்து வழக்கு பதிந்து எப்.ஐ.ஆர்., கொடுத்தனர். ஆனால், அதில் முழு விவரங்கள் இல்லாததுடன், அது தொடர்பான நடவடிக்கை ஏதும் இதுவரை எடுக்கப்படவில்லை. போலீசார், கடந்த காலத்தில் அப்போதைய அமைச்சர் சாமிக்கு பயந்து எங்களால் எதுவும் செய்ய முடியாது என்று கூறிவிட்டனர்.
இதனால், கடந்த ஐந்தாண்டுகளாக எங்கள் சொந்த ஊருக்குள் நுழைய முடியாமல், வீடு மற்றும் உடமைகளை விட்டு விட்டு பயந்து வாழ்ந்து வருகிறோம். மேற்கொண்டு எந்த தொழிலும் செய்ய முடியாமல், வாழ்வதற்கு வழியில்லாமல் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, எனக்கும் குடும்பத்திற்கும் பாதுகாப்பு வழங்குவதுடன், என்னிடம் இருந்து பறித்துச் சென்ற பொருட்களை மீட்டுத் தர வேண்டுகிறேன். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துணை கமிஷனர் அலுவலகத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.


