பத்மநாபசுவாமி கோவிலுக்கு 5 அடுக்கு பாதுகாப்பு
பத்மநாபசுவாமி கோவிலுக்கு 5 அடுக்கு பாதுகாப்பு
பத்மநாபசுவாமி கோவிலுக்கு 5 அடுக்கு பாதுகாப்பு
ADDED : செப் 29, 2011 07:10 PM
திருவனந்தபுரம் : பல கோடி ரூபாய் புதையல்கள் உள்ளதாக கருதப்படும் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலுக்கு 5 அடுக்கு பாதுகாப்பு வழங்க கேரள அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் முதல்வர் ஓமன் சாண்டி தலைமையில் நடைபெற்றது. அதிநவீன பாதுகாப்பு சாதனங்கள் பயன்படுத்தப்பட உள்ளதாகவும், மேலும், திருட்டு, இயற்கை பேரிடர் உள்ளிட்ட எவ்வித பாதிப்புகளிலும் சிக்காதவாறு 5 அடுக்கு பாதுகாப்பு மேற்கொள்ள இருப்பதாக அதில் முடிவு செய்யப்பட்டது.