உலக அமைதி வேண்டி கஞ்சிக்கலய ஊர்வலம்
உலக அமைதி வேண்டி கஞ்சிக்கலய ஊர்வலம்
உலக அமைதி வேண்டி கஞ்சிக்கலய ஊர்வலம்
ADDED : ஆக 09, 2011 02:29 AM
சிதம்பரம் : உலக அமைதி வேண்டி சிதம்பரம் நகர அனைத்து ஆதிபராசக்தி மன்றங்கள் சார்பில் கஞ்சிக்கலய ஊர்வலம் நடந்தது.முத்தையா நகரில் ஆதிபராசக்தி சக்தி பீடத்திலிருந்து துவங்கிய ஊர்வலத்திற்கு மாவட்ட பொறுப்பாளர்கள் பழனிப்பன், சண்முகம், செல்வராஜ் தலைமை தாங்கினர்.
அண்ணாமலைப் பல்கலைக்கழக பதிவாளர் ரத்தினசபாபதி துவக்கி வைத்தார்.ஊர்வலம் ரயில்வே மேம்பாலம், எஸ்.பி., கோவில் தெரு, தெற்கு வீதி, மேல வீதி வழியாக வந்து மன்றத்தை அடைந்தது.அங்கு நடந்த நிகழ்ச்சியில் ஆன்மிக சொற்பொழிவு வட்ட பொறுப்பாளர்கள் பார்த்தசாரதி, மணிவாசகம், கண்ணன், பேராசிரியர்கள் மோகன்குமார், ஞானகுரு, பாலகுமார், விஜயகுமாரி, மன்ற பொறுப்பாளர் சேகர், சண்முகசுந்தரி, அஞ்சம்மாள், மைதிலி மற்றும் பலர் பங்கேற்றனர்.பொறியாளர் சுப்ரமணியம் சொற்பொழிவாற்றினார். 1,008 ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


