ADDED : ஆக 25, 2011 11:35 PM
சிங்கம்புணரி : பிரான்மலை வள்ளல்பாரி மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கான நுகர்வோர் விழிப்புணர்வு கண்காட்சி நடந்தது.
தலைமை ஆசிரியர் கருப்புச்சாமி தலைமை வகித்தார். தனி ஆய்வாளர் சக்திவேல் வரவேற்றார். வட்ட வழங்கல் அலுவலர் பெரியணன் துவக்கி வைத்தார்.கண்காட்சியில் பல வித உணவுப்பொருட்கள் வைக்கப்பட்டிருந்தது.நுகர்வோர் மன்ற விரிவாக்க ஆசிரியர் விக்னேஸ்வரன் பங்கேற்றனர்.