ADDED : ஜூலை 16, 2011 02:35 AM
தியாகதுருகம்:சாலையை கடக்க முயன்ற மூதாட்டி ஜீப் மோதி
இறந்தார்.தியாகதுருகம் அடுத்த வடதொரசலூரைச் சேர்ந்த பால்பெரியசாமி மனைவி
அமுதாஜீவன் (57).
இவர் நேற்று மதியம் 2 மணிக்கு தியாகதுருகம்,
திருக்கோவிலூர் சாலையை கடக்க முயன்றார். அப்போது தியாகதுருகம் நோக்கி சென்ற
மகேந்திரா ஜீப் அவர் மீது மோதியது. பலத்த காயமடைந்த அவர் கள்ளக்குறிச்சி
அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்தார்.விபத்து
குறித்து தியாகதுருகம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.