ADDED : ஆக 01, 2011 03:49 AM
திருச்செங்கோடு: தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு, எம்.எல்.ஏ.,
சம்பத்குமார், புதிய ரேஷன் கார்டுகளை வழங்கினார்.திருச்செங்கோடு சட்டசபை
தொகுயில், ரேஷன் கார்டு இல்லாதவர்கள் புதிய கார்டு கேட்டு
விண்ணப்பித்திருந்தனர்.
அந்த விண்ணப்பத்தின் மீது அதிகாரிகள் விசாரணை
மேற்கொண்டு, தகுதியான நபர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு புதிய ரேஷன்
கார்டு வழங்க முடிவு செய்தனர்.அதற்கான விழா, திருச்செங்கோடு எம்.எல்.ஏ.,
அலுவலகத்தில் நேற்று நடந்தது. வட்ட வழங்கல் அலுவலர் குப்புசாமி தலைமை
வகித்தார். எம்.எல்.ஏ., சம்பத்குமார், 350 பேருக்கு புதிய ரேஷன் கார்டுகளை
வழங்கினார்.நிகழ்ச்சியில், தே.மு.தி.க., நகரச் செயலாளர் தம்பி மனோகரன்,
துணைச் செயலாளர் நல்லமுத்து, ஒன்றியச் செயலாளர் செங்கோட்டையன், துணைச்
செயலாளர் அறிவழகன், நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.