
தூக்கு தண்டனை தேவைதான்!
கா.அன்பழகன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: நாட்டில் இதுவரை இதுபோல எத்தனையோ குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டிருக்கின்றனர்.
ராஜிவ் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மொத்தம், 26 பேர். அத்தனை பேருக்கும் சிறப்புப் புலனாய்வு நீதிமன்றம், மரண தண்டனைதான் வழங்கி தீர்ப்பளித்தது. ஆனால், சுப்ரீம் கோர்ட், அதில், 23 பேரின் மரண தண்டனையை ரத்து செய்தது. இந்த மூவருக்கு மட்டும் ஏன் மரண தண்டனையை உறுதி செய்தது. முகாந்திரம் இருந்ததால்தானே இம்மூவரின் தண்டனையை உறுதி செய்தது.மரண தண்டனை எதிர்ப்பாளர்கள் ஏன் இதை சிந்திக்க மறுக்கின்றனர்? இம்மூவரின் மரண தண்டனையை எதிர்ப்பவர்கள் கூறும் காரணங்கள் வினோதமாக உள்ளது.
அவர்கள், 'தமிழர்கள்' என்கின்றனர். அப்படியென்றால், அவர்கள் மலையாளிகளாகவோ, தெலுங்கர்களாகவோ, கன்னடர்களாகவோ அல்லது வேறு ஏதேனும் மொழி பேசுபவர்களாகவோ இருந்தால் எதிர்க்க மாட்டார்களா?
பேட்டரி வாங்கியது தப்பில்லை; ஆனால், அதை யாருக்குக் கொடுத்தார், எதற்குக் கொடுத்தார் என்பதுதான் தப்பு. 'போப்பா... நீங்களே போய் பேட்டரி வாங்கிக் கொள்ளுங்கள்' என்று சொல்லி இருக்கலாமே! 'கூடா நட்பு கேடாய் முடியும்' என்பது இதுதான்.
ஆணுக்கு ஒரு நியாயம், பெண்ணுக்கு ஒரு நியாயமா என்று கேள்வி வேறு.
இந்நிலையில், மரண தண்டனையும் கிடையாது என்ற நிலை வருமானால், நாடும், நாட்டில் உள்ள மக்களும், என்ன கதி ஆவர் என்பதை சற்று பகுத்தறிவோடு சிந்தித்துப் பாருங்கள். உண்மை புரியும்; உள்ளம் தெளியும்.
ஹசாரேயும்,காந்தியும்...
சு.ராமஜோதி, பெரியநாயக்கன்பாளையம், கோவையிலிருந்து எழுதுகிறார்: திகார் சிறையில் இருந்து வெளிவந்த அன்னா ஹசாரே, ராம்லீலா மைதானத்தில், காந்தியை போலவே வேக வேகமாக ஓடியதைப் பார்க்க முடிந்தது.தூய எண்ணத்திலும், தூய சிந்தனையிலும், காந்தியைப் போலவே இருக்கிறார் ஹசாரே. ஆனால், அவரின் வலிமையான லோக்பால் கோரிக்கைக்கு, முக்கியமான கட்சிகள் இன்னும் ஆதரவு தெரிவிக்கவில்லை.
தேசத்தைச் சுரண்டும் களவாணிகளுக்கு எதிராக இவர்கள் போராடுகின்றனர். இன்று நாம், இரண்டாவது சுதந்திர போராட்டத்தை துவக்கி இருக்கிறோம்.
நடுங்குகிறதுகாங்கிரஸ்!
சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவின் ஊழல் ஒழிப்பு உண்ணாவிரதத்தின் விளைவுகள் குறித்து, பிரதமர், சக அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.