
வரலாறு மாறாது!
ஜெயராமன்
கல்யாண சுந்தரம், பெங்களூரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
'முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஹிந்துத்வா தலைவர்' என, பா.ஜ., அண்ணாமலை
சொன்னதற்கு, அ.தி.மு.க.,வினர் பொங்க ஆரம்பித்து விட்டனர்.
ஒன்றும் புரியவில்லையே சிபல்?
எஸ்.மணியன்,
சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தேர்தல் நடந்து
முடிந்ததும், தேஜஸ்வி யாதவ் சிறைக்கு செல்வார் என பிரதமர் மோடி கூறுகிறார்.
இதன் வாயிலாக சி.பி.ஐ., போன்ற மத்திய விசாரணை அமைப்புகள் தன்
கட்டுப்பாட்டுக்குள் இருப்பதை பிரதமரே ஒப்புக் கொண்டுள்ளார்' என, புது கரடி
ஒன்றை கட்டவிழ்த்து விட்டுள்ளார், முன்னாள் காங்கிரஸ்காரரும் இந்நாள்
ராஜ்யசபா சுயேச்சை எம்.பி.,யுமான கபில் சிபல்.
சராசரி அரசியல்வாதியான கெஜ்ரிவால்!
என்.
மல்லிகை மன்னன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மதுபான
கொள்கை முறைகேடு ஊழல் வழக்கில் சிக்கி சிறைப் பறவையான அரவிந்த்
கெஜ்ரிவால், சிறையில் இருந்த போது தன் அருமை மனைவி ஜான்சி ராணி போல
வீராவேசமாக செயலாற்றினார் என்று பாராட்டுப் பத்திரம் வாசித்திருக்கிறார்.