Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/நிலம் கையகப்படுத்துவதில் வருவாய் துறையினர் தாமதம் : மவுன்ட் - மேடவாக்கம் சாலை விரிவாக்கம் இழுபறி

நிலம் கையகப்படுத்துவதில் வருவாய் துறையினர் தாமதம் : மவுன்ட் - மேடவாக்கம் சாலை விரிவாக்கம் இழுபறி

நிலம் கையகப்படுத்துவதில் வருவாய் துறையினர் தாமதம் : மவுன்ட் - மேடவாக்கம் சாலை விரிவாக்கம் இழுபறி

நிலம் கையகப்படுத்துவதில் வருவாய் துறையினர் தாமதம் : மவுன்ட் - மேடவாக்கம் சாலை விரிவாக்கம் இழுபறி

ADDED : செப் 26, 2011 09:07 PM


Google News

நிலம் கையகப்படுத்துவதில் வருவாய்த் துறை அதிகாரிகள் தொடர்ந்து மெத்தனம் காட்டி வருவதால், மவுன்ட்மேடவாக்கம் நான்கு வழிச்சாலை விரிவாக்க பணிகள் இழுபறியில் உள்ளன.

இதனால் நெரிசலும், விபத்துக்களும் அச்சாலையில் அதிகரித்து வருகின்றன. ஜி.எஸ்.டி., சாலையை, பல்லாவரம்துரைப்பாக்கம் ரேடியல் சாலை, வேளச்சேரி சாலை, இன்னர்ரிங் சாலை, தாம்பரம்வேளச்சேரி சாலை உள்ளிட்ட பல முக்கிய சாலைகளுடன் இணைக்கும் வகையில், மவுன்ட்மேடவாக்கம் சாலை அமைந்துள்ளது. மொத்தம் 9.1கி.மீ., தூரம் கொண்ட இச்சாலை, தற்போது இருவழி பாதையாக உள்ளது. சாலையோர ஆக்கிரமிப்புக்கள் அதிகமாக இருப்பதால், தற்போது ஒருவழி பாதையில் தான் போக்குவரத்து நடந்து வருகிறது.



ஒரு சில இடங்களில் மட்டுமே, சாலை அகலமாக இருக்கும். இந்த சாலையை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டு, கடந்த 2008ம் ஆண்டு பணிகள் டெண்டர் விடப்பட்டன. மொத்தம் 14 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டம், ஆதம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன் வாணுவம்பேட்டை, வாணுவம்பேட்டைமடிப்பாக்கம், மடிப்பாக்கம்கீழ்கட்டளை, கீழ்கட்டளைகோவிலம்பாக்கம், கோவிலம்பாக்கம் மேடவாக்கம் கூட்ரோடு என, ஐந்து செக்டராக பிரிக்கப்பட்டன. தற்போது இந்த சாலை 10.5மீட்டர் முதல் 16.7மீட்டர் வரை அகலம் உள்ளது. இதை ஒரு சீராக 22 மீட்டர் அகலமாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.



இதற்காக, ஐந்து செக்டரிலும் சேர்த்து மொத்தம், 25 ஆயிரத்து 748 சதுரமீட்டர் நிலம் கையகப்படுத்த வேண்டும். இந்த நிலத்தை கையகப்படுத்தும் பணிகள் துவங்கப்பட்டு, நில உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப் பட்டது.

அத்துடன் நிலத்தை பெற்று, நெடுஞ்சாலைத் துறையிடம் ஒப்படைக்கும் பணிகள் கிடப்பில் போடப்பட்டன. இதனால் மவுன்ட்மேடவாக்கம் சாலையில் நெரிசலும், விபத்துக்களும் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. இது குறித்து பேசிய பெயர் கூற விரும்பாத நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர், மவுன்ட்மேடவாக்கம் சாலை விரிவாக்க திட்டத்தை துரிதப்படுத்த, நெடுஞ்சாலைத் துறை தயாராக உள்ளது. நிலம் எங்களுக்கு கிடைத்தால் தான் பணிகளை செய்ய முடியும். எங்கள் தரப்பில் மின்வாரியத்திற்கு பணம் செலுத்தியுள்ளோம். அவர்களும் 50 சதவீதம் மின்கம்பங்களை அப்புறப்படுத்தியுள்ளனர். கீழ்கட்டளையில் பாலம் அமைக்கும் பணிகள் முடிந்துள்ளன. வருவாய் துறையில் தாசில்தார், ஆர்.ஐ., நியமிக்கப்படாமல் நிலம் கையகப்படுத்தும் திட்டத்தை கிடப்பில் வைத்துள்ளனர். நிலம் கைக்கு வந்தால், ஓராண்டிற்குள் இத்திட்டம் பயன்பாட்டிற்கு வரும் என்றார்.

நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து பேசிய, சிறப்பு துணை கலெக்டர் (நிலம் எடுப்பு) மணி, ''மவுன்ட்மேடவாக்கம் சாலை விரிவாக்கத்திற்கு நிலம் எடுக்கும் பணிக்காக தாசில்தார், ஆர்.ஐ., நியமிக்கப்பட்டுள்ளனர். நில உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இன்னும் மூன்று மாதத்தில் நிலத்தை பெற்று நெடுஞ்சாலைத் துறையிடம் ஒப்படைப்போம், என்றார்.



- கே.எஸ்.வடிவேலு -







      Our Apps Available On




      Dinamalar

      Follow us