ADDED : ஜூலை 17, 2011 01:35 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அடுத்த வாசுதேவனூரைச் சேர்ந்தவர் கேசவன்.
இவரது மனைவி அமுதா. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் இருவருக்கும் திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. திருமணமான 3 ஆண்டுகளுக்கு பிறகு கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. கேசவன் மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சணையாக அமுதாவிடம் 70 ஆயிரம் ரூபாய் கேட்டு கொடுமைபடுத்தினர்.கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் கேசவன் மற்றும் அவரது குடும்பத்தினர் கிருஷ்ணன், பவுனாம்பாள், அலமேலு, சேகர், சந்திரா மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.