UPDATED : அக் 10, 2011 06:27 PM
ADDED : அக் 10, 2011 05:15 PM
சென்னை: 2ஜி வழக்கு தொடர்பாக மாஜி அமைச்சர் தயாநிதி,அவரது சகோதரர் கலாநிதி மற்றும் சன்டிவி அலுவலகங்களில் சி.பி.ஐ., போலீசார் சோதனை நடத்தினர்.
இந்த சோதனை மதியம் 2. 55 மணியளவில் முடிந்தது. பின்னர் தொடர்ந்து மீண்டும் தயாநிதி, கலாநிதி வீட்டில் நுழைந்த பி.எஸ்.என்.எல்., மற்றும் தடயவியல் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனை மாலை 5.40 மணி வரை நீடித்தது. பின்னர் அதிகாரிகள் கிளம்பி சென்றனர்.


