ADDED : ஜூலை 24, 2011 02:33 PM
திருச்சி: திருச்சி மாநகராட்சியின் 139வது வார்டுக்கு உட்பட்ட பஞ்சப்பூர்பகுதியில் மாநகராட்சி கழிவுகளை கொட்டும் சாக்கடை உள்ளது.
இங்கு அடையாளம் தெரியாத ஒரு சிலர் இறந்த நிலையில் இருந்த டெஸ்ட் பேபி சிசுக்களை வீசிவிட்டு சென்றுள்ளனர். இதனை நாய்கள் இழுத்து வந்து தெருவில் போட்டுள்ளன. இதனை கண்ட குழந்தைகள் பயத்துடன் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.