Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/கள்ளர் ஜாரி நிலங்களைமீட்க கோரிக்கை

கள்ளர் ஜாரி நிலங்களைமீட்க கோரிக்கை

கள்ளர் ஜாரி நிலங்களைமீட்க கோரிக்கை

கள்ளர் ஜாரி நிலங்களைமீட்க கோரிக்கை

ADDED : செப் 25, 2011 09:42 PM


Google News
தேனி:கள்ளர் ஜாரி நிலங்களை மீட்க வலியுறுத்தி, மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தமிழ்நாடு பிறமலைக்கள்ளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை மாநாடு தேனியில் நேற்று நடந்தது.

கூட்டமைப்பின் மாநில தலைவர் கார்த்திகைசாமி தலைமை வகித்தார்.கள்ளர் பேரவை நிறுவன தலைவர் மாயத்தேவர் முன்னிலை வகித்தார்.கூட்டமைப்பின் மாநில பொது செயலாளர் பாண்டியன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் இளங்கோவன், பேரவை மாவட்ட செயலாளர் ஈஸ்வரன் உட்பட பலர் பங்கேற்றனர்.கள்ளர் ஜாரி நிலங்களை மீட்டு உரிய பயனாளிகளிடம் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கள்ளர் சீரமைப்பு துறைக்கு ஐ.ஏ.எஸ்.,அதிகாரிகளை நியமிக்க வேண்டும்.அரசு வழங்கும் சலுகைகளை முறைப்படுத்த வேண்டும், உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us