Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/பதவி உயர்வுக்காக பயன்படுத்தப்பட்டாரா சிறுமி? ராமேஸ்வரத்தில் பிடிபட்ட இருவரிடம் விசாரணை

பதவி உயர்வுக்காக பயன்படுத்தப்பட்டாரா சிறுமி? ராமேஸ்வரத்தில் பிடிபட்ட இருவரிடம் விசாரணை

பதவி உயர்வுக்காக பயன்படுத்தப்பட்டாரா சிறுமி? ராமேஸ்வரத்தில் பிடிபட்ட இருவரிடம் விசாரணை

பதவி உயர்வுக்காக பயன்படுத்தப்பட்டாரா சிறுமி? ராமேஸ்வரத்தில் பிடிபட்ட இருவரிடம் விசாரணை

UPDATED : ஜூலை 27, 2011 07:26 PMADDED : ஜூலை 27, 2011 05:55 PM


Google News

ராமநாதபுரம் : மதுரை திருமங்கலம் சிறுமி, 'பதவி உயர்வுக்காக அதிகாரிகளுக்கு விருந்தாக்கப்பட்டரா? என ராமேஸ்வரத்தில் பிடிபட்ட இருவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விடுப்பு எடுத்து தலைமறைவான ராமேஸ்வரம் நகராட்சி ஊழியர் இளங்கோ உட்பட பலரை தேடி வருகின்றனர். மதுரை திருமங்கலம் அருகேயுள்ள வாகை குளத்தை சேர்ந்த 17 வயது சிறுமி ஈஸ்வரி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமங்கலத்தில் ஜவுளிக்கடையில் வேலை பார்த்தார். அப்போது, தோழியின் தாயார், நல்ல வேலையில் சேர்த்துவிடுவதாக கூறி விபச்சார கும்பலிடம் விற்றார். கடந்த இரண்டரை ஆண்டுகளாக தமிழக முழுவதும் விபச்சார கும்பல்களிடம் கைமாற்றப்பட்டு கொடுமையை அனுபவித்தார். சில நாட்களுக்கு முன் ராமநாதபுரத்திற்கு அழைத்து வரப்பட்டு பலருக்கு விருந்தாக்கப்பட்டார். இரண்டு நாட்களுக்கு முன் அந்த கும்பலிடம் இருந்து தப்பினார். அவரை தொண்டு நிறுவத்தினர் மீட்டனர். ராமநாதபுரம் மகளிர் போலீசில் சிறுமி நேற்று முன்தினம் புகார் கொடுத்தார். அதில் தனக்கு நேர்ந்த கொடுமைகளை பற்றியும், சம்பந்தப்பட்டவர்கள் பற்றியும் தெரிவித்தார். மதுரை திருமங்கலம் பூங்கோதை, புரோக்கர்கள் மதுரை சத்யா, திருப்பரங்குன்றம் செல்வி, சந்திரா, கலைச்செல்வி, காரைக்குடி ருக்மணி, ராமேஸ்வரம் நகராட்சி தி.மு.க., தலைவர் ஜலீல், இவருடன் எப்போதுமே இருக்கும், கிரகபிரவேசம், தர்ப்பணங்களில் பங்கேற்கும் புரோகிதரான ராமேஸ்வரம் தெற்கு ரதவீதியை சேர்ந்த கபாலி என்ற பாலகிருஷ்ணன், சாத்தான்குளம் சேக், ராமேஸ்வரம் இளங்கோ, ராமநாதபுரம் ஆனந்தம், மதுரை பாண்டி, ராஜேந்திரன் ஆகியோர் உட்பட பலர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் சிறுமியை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.கோர்ட் உத்தரவுபடி, இரண்டாவது நாளாக, ராமநாதபுரம் அரசு மருத்துவனையில் சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.



அதிகாரிகளுக்கு தொடர்பா?: இதையடுத்து ராமநாதபுரம் போலீசார், சிறுமியிடம் நேற்று விசாரணை மேற்கொண்டனர். பதவி உயர்விற்காக அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கு விருந்தாக்கப்பட்டாரா? அவர்களுடைய போட்டோவை சிறுமியிடம் காண்பித்தால், அடையாளம் சொல்ல முடியுமா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.



நடவடிக்கை: ராமநாதபுரம் எஸ்.பி., அனில்குமார் கிரி கூறியதாவது: இந்த வழக்கு தொடர்பாக மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சம்பவம் மதுரையில் நடந்துள்ளது. குற்றவாளிகள் மதுரையில் பதுங்கியுள்ளனர். ராமேஸ்வரம் நகராட்சி தி.மு.க., தலைவர் ஜலீல் இங்கே இல்லை. இந்த வழக்கு மதுரைக்கு மாற்றப்பட வாய்ப்புகள் உள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் ஐந்து பேர் மட்டுமே ஈடுபட்டுள்ளனர். இதில் ஈடுபட்ட கும்பல்களை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். தற்போது மருத்துவ பரிசோதனை நடந்து வருகிறது. இதன் அறிக்கை வந்த பிறகு சிறுமியிடம் விசாரணை செய்து, குற்றம் செய்தவர்களை கைது செய்வோம், என்றார். இது சம்பந்தமாக ராமேஸ்வரத்தை சேர்ந்த இரண்டு பேரை பிடித்த போலீசார் ராமநாதபுரம் கொண்டு வந்தனர். அவர்களை சிறுமியிடம் அடையாளம் காண்பித்து மேலும் பல தகவல்கள் சேகரிக்க உள்ளனர்.



தலைமறைவு: இந்த தகவல் வெளியானதை தொடர்ந்து ராமேஸ்வரம் நகராட்சி சுகாதார மேற்பார்வையாளர் இளங்கோ நேற்று மதியத்திற்கு மேல் விடுப்பில் சென்றார். இவர் உட்பட புரோகிதர் பாலகிருஷ்ணண், நகராட்சி தலைவர் ஜலீல் உடன் தொடர்புடைய உள்ள சிலர் நேற்று முன்தினம் மதியத்துக்கு மேல் தலை மறைவாகினர். இதில் பாலகிருஷ்ணன், மொபைல்போனையும் வீட்டிலேயே வைத்து சென்றுள்ளார். இவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us