வரலாற்றை மதிக்காதவர்கள் சந்ததிக்கு செய்யும் துரோகம் : இ.கம்யூ., நல்லகண்ணு பேச்சு
வரலாற்றை மதிக்காதவர்கள் சந்ததிக்கு செய்யும் துரோகம் : இ.கம்யூ., நல்லகண்ணு பேச்சு
வரலாற்றை மதிக்காதவர்கள் சந்ததிக்கு செய்யும் துரோகம் : இ.கம்யூ., நல்லகண்ணு பேச்சு

ராஜபாளையம் : ''வரலாற்றை மதிக்காதது நம் சந்ததியினருக்கு செய்யும் துரோகம், '' என, ராஜபாளையத்தில் நடந்த விழாவில் இந்திய.கம்யூ., தேசிய கட்டுப்பாட்டு குழு தலைவர் நல்லகண்ணு பேசினார்.
சோனியா என்றாலே மகாத்மா காந்தியின் பேத்தி என்று சொல்லும் நிலை உள்ளது. மதுரையில் ஆலய பிரவேச போராட்டத்தில் ஈடுபட்ட தியாகி வைத்தியநாதய்யர் வீடு நினைவு சின்னமாக இல்லை. ஆனால், அது இன்று அசைவ ஓட்டலாக மாறிவிட்டது. வரலாற்றை மதிக்காதவர்கள், வாழும் சந்ததிக்கு துரோகம் செய்தவர்கள் ஆவர். வருமானம் வருகிறது என்பதற்காக கிரானைட், மணல் போன்ற இயற்கையை சுரண்ட கூடாது,'' என்றார்.
லிங்கம் எம்.பி., தலைமை வகித்தார். சீனிவாசராஜா வரவேற்றார். நிகழ்ச்சியை நகர் செயலாளர் ரவி தொகுத்து வழங்கினார். பொன்னுபாண்டியன் எம்.எல்.ஏ., ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரி முதல்வர் வெங்கட்ராமன், முன்னாள் எம்.எல்.ஏ., ராமசாமி உட்பட பலர் கலந்துகொண்டனர். மணியம் நன்றி கூறினார்.


