ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை
ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை
ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை
ADDED : ஜூலை 21, 2011 12:53 AM
உடுமலை : உடுமலை நேருவீதி காமாட்சி அம்மன் கோவிலில், 24மனை தெலுங்கு செட்டியார்கள் சமூக அறக்கட்டளை சார்பில், கல்வி விழா நடந்தது.
அறக்கட்டளை தலைவர் ஜெகதீசன் தலைமை வகித்தார். அறக்கட்டளையின் செயலர் பேராசிரியர் துரை அங்குசாமி வரவேற்றார். திருப்பூர் தொழிலதிபர் கிருஷ்ணகுமார் உயர் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு விருதுகளையும்; இலவச பாட புத்தகங்களை கோவை பாஸ்போர்ட் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி வழங்கினர்.ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை உடுமலை லட்சுமிபதி
வழங்கினார். தொடர்ந்து ஸ்ரீதேவி சந்தானம் பரதநாட்டியம் நிகழ்ச்சி நடந்தது. ஆடிட்டர் தேவேந்திரன் நன்றி கூறினார். கிருஷ்ணசாமி, முருகேசன், சவுந்தரகுமார் பங்கேற்றனர்.உடுமலை நேரு வீதி காமாட்சி அம்மன் கோவிலில், 24மனை தெலுங்கு செட்டியார்கள் சமூக அறக்கட்டளை சார்பில், கல்வி விழா நடந்தது.


