ADDED : ஜூலை 24, 2011 01:19 AM
துறையூர்: துறையூர் விநாயகர் தெருவை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்.
இவரது மனைவி செல்வி(36). இவர்களது மகளுக்கு வரன் அமைந்ததால், உடனே திருமணம் நடத்த வேண்டும் என செல்வி கூறியுள்ளார். இதற்கு ராதாகிருஷ்ணன் பணம் எப்படி ஏற்பாடு செய்வது என கூறி திருமணத்துக்கு மறுத்துள்ளார். இதில், கணவன், மனைவி இடையே ஏற்பட்ட மனக்கசப்பில் செல்வி, தூக்கு போட்ட நிலையில் பாலாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார்.


