Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ரேஷன்கடைகளில்"ஈவ் டீசிங்' தேனி திருநங்கைகள் புகார்

ரேஷன்கடைகளில்"ஈவ் டீசிங்' தேனி திருநங்கைகள் புகார்

ரேஷன்கடைகளில்"ஈவ் டீசிங்' தேனி திருநங்கைகள் புகார்

ரேஷன்கடைகளில்"ஈவ் டீசிங்' தேனி திருநங்கைகள் புகார்

ADDED : ஆக 24, 2011 12:26 AM


Google News

தேனி : ரேஷன்கடைகளில தங்களை 'ஈவ்டீசிங்' செய்வதாக திருநங்கைகள் புகார் கூறினர்.

தேனியில் கலெக்டர் பழனிசாமி தலைமையில் திருநங்கைகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. வீட்டுமனை பட்டா, ரேஷன் கார்டு, சிறு தொழில் கடன் வழங்க வேண்டும் என திருநங்கைகள் கோரிக்கைகள் வைத்தனர். திருநங்கைகள் சிலர் பேசுகையில்,'ஜெயமங்கலம், தேனி, பெரியகுளத்தில் உள்ள ரேஷன்கடைகளில், பொருள் வாங்க சென்றால் விற்பனையாளர்கள் தங்களை 'ஈவ்டீசிங்' செய்கின்றனர்,' என்றனர். விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us