பாளை., மத்திய சிறை கைதிகளை சந்தித்த தி.மு.க., மாஜி அமைச்சர்கள்
பாளை., மத்திய சிறை கைதிகளை சந்தித்த தி.மு.க., மாஜி அமைச்சர்கள்
பாளை., மத்திய சிறை கைதிகளை சந்தித்த தி.மு.க., மாஜி அமைச்சர்கள்
ADDED : ஜூலை 29, 2011 04:40 AM

திருநெல்வேலி : பாளை., சிறையில் உள்ள மதுரை நிர்வாகிகளை, முன்னாள் அமைச்சர்கள் நேற்று சந்தித்தனர்.
மதுரையைச் சேர்ந்த தி.மு.க., நிர்வாகிகள் தளபதி, கொடிசந்திரசேகர், கிருஷ்ணபாண்டி ஆகியோர், விசாரணை கைதிகளாகவும், பொட்டுசுரேஷ் (சுரேஷ்பாபு) குண்டர் சட்ட தண்டனை கைதியாகவும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை, தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, மைதீன்கான், தமிழரசி மற்றும் நெல்லை மாவட்ட செயலர் கருப்பசாமிபாண்டியன் உள்ளிட்டோர் சந்தித்து ஆறுதல் கூறினர்.


